29th July 2021 21:00:38 Hours
231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 11 (தொ) இலங்கை சிங்க படையின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இனங்களை உள்ளடக்கிய 1246 குறைந்த வருமானம் கொண்ட ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகிக்க அதிகபட்ச ஆதரவை வழங்கினார்.
ஹமீத் ஹஜ்ஜியார் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் தலா ரூபா 1500.00 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை கொண்ட பொதிகளை பொதியிடல் மற்றும் கஷ்ட பிரதேசங்களுக்கு விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு நன்கொடையாளர்களின் வேண்டுகோளிக்கு இணங்க ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
இந்த தொண்டு திட்டம் அப்பகுதியில் பிரபலமான நன்கொடையாளரான மறைந்த ஹமீத் ஹஜ்ஜியாரின் பிறந்த தினத்தையொட்டி முன்னெடுக்கப்பட்டது.
231 வது பிரிகேட் பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி, சமூகத் தலைவர்கள் மற்றும் 11 வது (தொ) சிங்கப் படையின் இரண்டாம் கட்டளை ஆகியோர் ஆராயம்பதி பெயில்வான் பள்ளிவாசலின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற விநியோகத் திட்டத்தில் இணைந்துக் கொண்டனர்.