27th June 2022 21:45:19 Hours
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அவசர தேவையாக காணப்பட்ட இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கான போத்தல்கள் இராணுவத்தின் ஊடக ஆலோசகர் திரு சிசிர விஜேசிங்க மற்றும் அவரது குடும்பத்தினரினரால் இன்று (27) பிற்பகல் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
ரூபா 165,000.00 பெறுமதியான மேற்படி பொருட்கள் திருமதி குசுமா இலுக்கும்புரே மற்றும் திரு சிசிர விஜேசிங்க ஆகியோரால் அபேக்ஷா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் லலித் படல்கொட மற்றும் வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் நிபுணர் வைத்தியர் சமன்மலி குணசேகர ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வைத்தியர் திருமதி ஷேர்லி இலுக்கும்புரே விஜேசிங்க அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
திரு சிசிர விஜேசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மருந்து மற்றும் சுகாதார முகாமைத்துவ ஆலோசகர் வைத்தியர் சஞ்சய பெரேரா இந்த திட்டத்திற்கான நன்கொடையை ஒருங்கிணைத்தார். இந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடையே இரத்தத்தில் இருந்து நுண்ணுயிரிகளை அறிவதற்கு இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கு தரமான போத்தல்கள் பயன்படுத்தப்படுகின்றன.