Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2020 00:31:06 Hours

அனுராதபுர 'ஜெய ஸ்ரீ மகா போதி'யில் இராணுவக் கொடிகளுக்கு ஆசிர்வாதம்

எதிர்வரும் இராணுவத்தின் 71 ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு (அக்டோபர் 10) மத ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக இன்று (30) காலை புனித அனுராதபுர 'ஜெய ஸ்ரீ மகா போதி' வளாகத்தில் மத ஆசிர்வாத நிகழ்வுகளானது மிக விமர்சையாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வளாகத்திற்கு வந்தவுடன் நினைவு ஆண்டு நிகழ்வுகள் தொடங்கியது. முதலில், அவர் வட மத்திய மாகாணத்திற்கான தலைவர் மற்றும் 'சங்கவாசய’ உள்ள எட்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் (அதமஸ்தந்திபதி) தலைவரான சங்கைக்குரிய டொக்டர் பல்லேகம சிரினிவெச நாயக்க தேரர் அவர்களுக்கு தனது மரியாதையினை செலுத்தினார். மற்றும் அவர் துறவிக்கு வெற்றிலை (தேஹெத் வட்டிய) மற்றும் 'அட்டபிரிகர' ஆகியவற்றை வழங்கி உதமலுவாவில் மத நிகழ்ச்சிகளை வழிநடத்த தலைமை தேரருக்கு அழைப்பு விடுத்தார்.

கொடி ஆசீர்வாத விழாவைத் தொடங்க மேடை அமைக்கப்பட்டிருந்த நிலையில், பாரம்பரிய ‘ஹெவிசி’ மற்றும் ‘மகுல் பெரா’ ஆகியவை எதிரொலிக்கத் தொடங்கின. சிறிது நேரம் கழித்து ஒரு துறவிகள் மத நிகழ்ச்சிகளுக்காக உதமலுவாவுக்குச் சென்றனர். இராணுவக் கொடிகளை ஆசிர்வாதங்களுக்காக மேல் எடுத்துச் செல்ல முன்னர் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிறந்த உடையணிந்து கொடியினை ஏந்தி வெலிமலுவ (கீழ்-அடுக்கு) எல்லைகளில் அனைத்து இராணுவக் கொடிகளுக்கும் முன்பாக வரிசையாக இருந்தனர்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி , அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், முன்னரங்கு பாதுகாப்பு படைப், பிரிவுகள்,பாதுகாப்பு படைப்பிரிவுகள், பிரிகேட் படைத் தலைமையகங்கள் , பயிற்சி நிலையங்கள் ஆகியவெற்றின் வண்ணமயமான இராணுவக் கொடிகளானது ஆசிர்வாதத்திற்காக மூன்று முறை வெலி மலுவவை சுற்றி கொண்டு செல்லப்பட்டன. அதன் பின்னர் குறித்த கொடிகளானது மெத மலுவ(நடு அடுக்கு) இல் இருந்த சிரேஷ்ட அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் இராணுவத் தளபதி புனித மரத்தினை சுற்றி கொடிகளை வைத்தார்.

அதன்பிறகு, மகா சங்க உறுப்பினர்கள் 'செத் பிரிதுடன்’புனித மரத்தின் அடிவாரத்தில் மல்லிகைத் தண்ணீரைத் தூவி, அனைத்து இராணுவக் கொடிகளுக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினர்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஒரே நேரத்தில் புனித போதியாவின் பாதத்தை சுற்றி மல்லிகை மற்றும் தாமரை மலர்களை வைத்து நாட்டின் இன்றியமையாத தேசத்தின் பாதுகாவலர்கள் மற்றும் அதில் பணியாற்றும் அனைவரின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார். இந்த நிகழ்வில் இரண்டு நாயக தேரர்கள் வழங்கிய சிறப்பு ‘அனுஷாசன’ (சொற்பொழிவுகளில்) மகா சங்கத்தின் உறுப்பினர்கள் தாய்நாட்டிற்கு இராணுவத்தின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.தனது சிறப்பு 'அனுஷாசன' (சொற்பொழிவு) இல், லங்கராமவின் தலைமை பதவியில் உள்ள வென் ராலபனவே தம்ம ஜோதி அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது, தற்போதுள்ள இராணுவத் தளபதி தேசத்துக்காக அர்ப்பணித்த சேவையைப் பற்றிய நினைவுகளையும், அத்துடன் நாட்டில் COVID-19 தொற்று நோயினை தடுப்பதில் அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பையும் நினைவு கூர்ந்தார்.

எட்டு வழிபாட்டுத் தலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ருவன்வெலிசாய விஹாரதிகாரி வென் டொக்டர் பல்லேகம ஹேமரதன நாயகே தேரர், ஸ்ரீ ஜயந்தி விஹாரையின் தலைமை தேரர் வென். நுகதென்ன பன்ஞானந்த நாயக்க தேரர், மிரிஸ்வேதிய தலைமை தேரர் ஈதலவெதுனுவெவ ஞானதிலக தேரர் மற்றும் தேரர்கள் உள்ளிட்டோர் மத வழிபாட்டில் பங்கேற்றனர்.

சங்க சகோதரத்துவத்தின் நல்வாழ்வு மற்றும் புனித இடத்தின் வளர்ச்சியை நோக்கிய இராணுவம் புனித ஸ்தலத்தின் மேம்பாட்டிற்காக ஒரு சிறப்பு பண நன்கொடை தளபதி அவர்களால் சங்கைகுறிய வென். டொக்டர் பல்லேகம சிரினிவாச நாயக்க தேரர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

வரவிருக்கும் 71 ஆவது இராணுவ ஆண்டுவிழா மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் வண்ணமயமான மற்றும் கண்ணியமான இரண்டாவது கொடி ஆசீர்வாத விழாவில் கலந்துகொள்ள புனிதமான நினைவுச்சின்னத்தில் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் கூடியிருந்தனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தளபதி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், பாதுகாப்புப் படைகளின் தளபதிகள், அனைத்து பதவி நிலை அதிகாரிகள், தளபதிகள், படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியில் பாரம்பரிய மற்றும் வண்ணமயமான கொடி ஆசீர்வாத நிகழ்விற்கு முன்னர் கடந்த திங்கட்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாலிகையில் மத நிகழ்ச்சி இடம்பெற்றது. ஒக்டோபர் 5 ஆம் திகதி கதிர்காம, கிரிவெஹரவில் மூன்றாவது பௌத்த ஆசிர்வாத நிகழ்வு இடம்பெறுவதோடு, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் இந்து மத ஆசர்வாத நிகழ்வுகளும் இடம்பெறும். அதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதியவர்கள் பிரதம அதியாக கலந்து கொள்ளவிருக்கும் இராணுவ தின நிகழ்வு காலிமுத்திடலில் இடம்பெறும்.

ஒக்டோபர் 1949 இல் ஸ்தாபிக்கப்பட்ட இராணுவம், இப்போது நாட்டின் மிக வலிமையான நிலப் படையாகக் காணப்படுகின்றது. இதில் தொண்டர் படையணி உட்பட 24 படையணிகள் உள்ளன, மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான முக்கிய வெற்றியின் பின்னர் தற்போது தேசத்தைக் கட்டியெழுப்பும் மேம்பாட்டுத் திட்டங்களில் இராணுவம் ஈடுபட்டுவருகின்றது. Mysneakers | Air Jordan Release Dates 2020