18th September 2019 07:47:32 Hours
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அக்குரேஹொடையில் புதிதாய் நிர்மாணித்து வரும் பாதுகாப்பு தலைமையகத்திற்கு நேற்றைய தினமான (17) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
இங்கு சென்ற இவர் இராணுவ கட்டிட 6. 7 தொகுதிகளை சென்று பார்வையிட்டு இந்த கட்டிடங்களுக்கான திட்டமிடல் பணிப்பாளாரான எயார் வைஷ் மார்ஷல் ரொஷான் பதிரனகே அவருடன் இந்த கட்டிட நிர்மானங்கள் தொடர்பாக கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
இதன் போது இராணுவ தளபதிக்கு திட்டமிடல் பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த கட்டிட தொகுதிகளுக்கான நிர்மான பணிகள் மேற்கொண்டு செல்வதாகவும் இன்னும் சில வாரங்களுக்குள் இந்த கட்டிட நிர்மாண பணிகளை நிறைவடைய செய்யலாம் என்று உறுதிப்படுத்தினார்.
இராணுவ தளபதியின் இந்த விஜயத்தின் போது பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, பொது பதவிநிலை பிரதானி, உபகரண மாஸ்டர் ஜெனரல், மாஸ்டர் ஜெனரல் போர்கருவி, இராணுவ விடுதி மற்றும் தங்குமிட பராமரிப்பு பணிப்பாளர் நாயகம், 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி போன்ற அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த விஜயம் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்தா கோட்டேகொட அவர்களது பணிப்புரைக்கமைய இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | シューズ