Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2019 22:40:46 Hours

அகரபத்தான மற்றும் கினிகத்தேன பகுதிகளில் இராணுவத்தினர் மீட்பு பணிகளில்

3 (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த 10 படை வீரர்களின் பங்களிப்புடன் நுவரேலியா மாவட்டத்திலுள்ள அகரபதான பகுதியில் இம் மாதம் (18) ஆம் திகதி நீரில் மூழ்கியிருந்த ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதுடன் இப்பகுதியிலிருந்து மேலும் ஒரு சிறுவனும், இரண்டு சிறுமிகளும் நீர்வழியை கடப்பதற்கு உதவிகளும் வழங்கியுள்ளனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி அவர்களின் வழிக் காட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் பணிப்புரைக்கமைய இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பலத்த மழை காற்றுடன் சீரற்ற வானிலை நிலைமை காரணமாக சபராகமுவ மாகாணம், தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் பலருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்ட காரணத்தினால் சதுப்பு வாயில்கள் திறக்கப்பட்டன.

இப்பகுதியிலிருந்து ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.

மேலும் கினிகத்தேன பகுதியில் (19) ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் மண்ணுக்குள் புதையுன்ட முஸ்லீம் வர்த்தகர்களின் சடலமும் படையினரினால் மீட்கப்பட்டது. Running sport media | Nike Off-White