Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2019 13:31:21 Hours

59ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் கே எச் பி பி பேணான்டோ அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை(12) கடமைப் பொறுப்பேற்றதுடன் இவர் இப் படைத் தலைமையகத்தின் 15ஆவது படைத் தளதபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரிகேடியர் கே எச் பி பி பெணான்டோ அவர்கள் 59ஆவது படைத் தலைமையக படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

மேலும் இப் படைத் தலைமையகத்தின் தளபதியான பிரிகேடியர் கே எச் பி பி பெணான்டோ அவர்கள் உத்தியோக பூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடடைப் பொறுப்பை ஏற்றார். மேலும் இப் படைத் தலைமையகத்தில் மரநடுகையை மேற்கொண்ட தளபதியவர்கள் படையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

இதன் போது இப் படைத் தலைமையக உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.latest Running Sneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C