22nd September 2019 18:30:20 Hours
மாத்தளை பௌத்த மகளிர் சங்கத்தின் நிதி அனுசரனையுடன் 542 ஆவது படைத் தலைமையகத்தின் பூரண ஏற்பாட்டில் நரிக்காடு மற்றும் கொண்டகச்சி பிரதேசத்திலுள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த 50 அங்கத்தவர்களுக்கு உலருணவு பொதிகள் இம் மாதம் (20) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
இந்த சமூக பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஆசிர்வாத த்துடன் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ ஏ ஐ ஜே பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 542 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரவி ஹேரத் அவர்களது தலைமையில் இந்த மனிதாபிமான சமூக நலன்புரி உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பொது மக்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE