Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2020 17:59:33 Hours

52 ஆவது படை பிரிவினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கல்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் முன் முயற்சியால் படையினரால் யாழ் குடா நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரிய குடும்பங்களை சேர்ந்த குடும்பங்களுக்கு 26 ஆம் திகதி வியாழக்கிழமை சமைத்த உணவு வழங்கும் பணியை மேற்கொண்டனர்.

சாவகச்சேரி பிரதேச செயலகப் பகுதியில் உள்ள வந்தாரவட்ட, மாகலங்கேணி, எலுத்துமட்டுவல் மற்றும் சிவன் கோவில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட எட்டு குடும்பங்களுக்கு படையினரால் மனிதாபிமானமான உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில், 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீத்திசிரி லியனகே ,522 ஆவது பிரிகேட் படை பிரிவின் கீழ் உள்ள 7 ஆவது கஜபா படையிணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் வேறு இடங்களில் தங்கியுள்ள அந்த குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு சமைத்த உணவை வழங்கினர். Nike air jordan Sneakers | adidas poccnr jumper dress pants size