05th December 2023 19:29:45 Hours
20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தனது 15 வது ஆண்டு நிறைவை வெள்ளிக்கிழமை (01 டிசம்பர் 2023) எல்பிட்டிய, பிட்டிகலவில் கொண்டாடியது.
அன்றைய நிகழ்ச்சிகள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நடைபெற்றதுடன், இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வீரமரணமடைந்த போர்வீரர்களுக்கு நினைவஞ்சலியும் வழங்கப்பட்டது. அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவடைந்தன.