30th November 2022 15:31:17 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் 641 வது காலாட் பிரிகேட்டின் 14 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கருவலகஸ்வெவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் 'அகஸ்தியன்' பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்களுக்கு வெள்ளிக்கிழமை (25) ம் திகதி தேவையான மேசைகள் மற்றும் கதிரைகள் வழங்கப்பட்டன.
பாலர் பாடசாலையின் சிறார்களுக்கான தேவையான தளபாடங்கள் குறைவாக இருந்ததால், சொந்த தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி படையினரால் இந்த சமூகம் சார்ந்த திட்டத்திற்காக இரண்டு மேசைகள் மற்றும் எட்டு கதிரைகளை உருவாக்கினர்.
641 வது காலாட் பிரிகேட்டின் தளபதியின் ஆசிர்வாதத்துடன் 14 வது இலங்கை சிங்க படையணியின் இரண்டு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் இராணுவத்தின் சிந்தனை மற்றும் ஆதரவை பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடதக்தாகும்.