17th August 2019 14:20:55 Hours
வீரவிலையில் அமைந்துள்ள 122 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக கேர்ணல் லங்கா அமரபால அவர்கள் இம் மாதம் (13) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது பதவியை பதவியேற்றார்.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை படையினர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவித்தனர். பின்னர் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு பொறுப்பேற்றார்.
பின்னர் புதிய கட்டளை தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு அதனை தொடர்ந்து படையினர் மத்தியில் உரையும் நிகழ்த்தினார்.
புதிய படைத் தளபதியான கேர்ணல் லங்கா அமரபால அவர்கள் இதற்கு முன்பு 593 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். short url link | Nike Shoes