20th December 2023 21:23:13 Hours
வெளிச்செல்லும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் செவ்வாய்க்கிழமை (19 டிசம்பர்) பனாகொட மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் அவர்கள் படையினருடன் குழு படம் எடுத்துக் கொண்டதுடன், தனது பதவிக்காலத்தில் படையினரின் பெறுமதியான சேவைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் அவர்களின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்கான பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது. இச் செயல் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் அவரது கடமை, அர்ப்பணிப்புக்கான பங்களிப்பு மற்றும் மரியாதைக்குறிய நன்றியையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்ப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.