Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th August 2019 09:10:50 Hours

யாழ் படையினரால் தொடர்ச்சியாக தென்னை மரநடுகை திட்டம்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களின் தலைமையில் படையினரது பங்களிப்புடன் இம் மாதம் (19) ஆம் திகதி திங்கட் கிழமை பலாலி பொது பிரதேசங்களில் தென்னை மரநடுகை திட்டத்தின் கீழ் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் குடா நாட்டில் தென்னை மரக்கன்றுகள் வளர்ப்பதையும் ஒரு பொருளாதார உற்பத்தியை பிரபலயப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முகமாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ