Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2020 20:30:32 Hours

முல்லைத்தீவு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்லெண்ண ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முல்லைத்தீவிலுள்ள அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகளுக்கு இடையில் ஒன்று கூடல் நிகழ்வானது இம் மாதம் (13) ஆம் திகதி இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களது தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பிரதி பொலிஸ் மாஅதிபர், மணலாறு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்கள், 59, 64, 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், முல்லைத்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், தனியார் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக இன்பமுற்றனர். Nike Sneakers | Sneakers