17th August 2019 23:36:54 Hours
வடக்கு முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக பிரிகேடியர் லக்ஷ்மன் பெர்ணாண்டோ அவர்கள் இம் மாதம் (15) ஆம் திகதி வியாழக் கிழமை சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
பின்னர் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் தளபதியினால் உரை நிகழ்த்தப்பட்டது.
பிரிகேடியர் லக்ஷ்மன் பெர்ணாண்டோ அவர்கள் இந்த பதவிக்கு வருகைக்கு முன்பு ஆளனி நிருவாக பணியகம், போதனை வைத்தியசாலை, கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் Adidas shoes | Air Max