11th January 2024 19:58:47 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க, போர்வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாகத்தினரால் தம்புள்ளையில் வசிக்கும் தகுதியான சிவில் நபர் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஒன்று சனிக்கிழமை (ஜனவரி 06) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
டி.என் ரோஹன பண்டார (வயது 40) என்ற இந்த நபர் மோட்டார் வாகன விபத்தில் இடுப்பின் கீழ் சுயநினைவை இழந்துள்ளார். போர்வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் அதிகாரிகள் அவரது வீட்டு வாசலுக்கு சென்று சக்கர நாற்காலியை வழங்கினர்.