Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2019 13:30:59 Hours

கிளிநொச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் பொல்ஹஷ்விட “வெதர அபி கட்டிய” சங்கத்தின் அனுசரனையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் கிளிநொச்சியிலுள்ள நெலும்பியஷ கேட்போர் கூடத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி கண் சிகிச்சை முகாம் இடம்பெற்றன.

இந்த சிகிச்சை முகாமானது 15 வைத்திய குழுவினரின் பங்களிப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவிநிலை அதிகாரி பிரிகேடியர் P.M.L சந்திரசிறி அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

கண் கிளினிக்கில் நடத்தையைத் தொடர்ந்து, பார்வைக் குறைபாடுள்ள 115 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்து 178 நோயாளிகள், கிளினிக்கிலிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டனர். மேலும் இராணுவ ஊழியர்களினால் 10 பெற்றோர்களும், இராணுவத்தில் உள்ள 04 சிவில் ஊழியர்களும் நடமாடும் சிகிச்சை முகாம்களில் ஆலோசனைகளைப் பெற்று கொண்டனர்.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் சிவில் சமூகத்தினர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.affiliate link trace | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ