25th September 2020 13:00:37 Hours
மன்னாரில் உள்ள 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் 7 ஆவது விஜயபாகு கலாட் படையணியின் படையினர் இன்று (25) ஆம் திகதி காலை மன்னார் பாலம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் வேளையில், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மஞ்சளுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
மதவாச்சி – மன்னார் வீதிப் பகுதியில் வீதித் தடைப் பரிசோதனையில் ஈடுபட்டு இருந்த 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் 7 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தப்பட்ட ஒரு டொயோட்டா டைனா லொரியை சோதனை செய்ததுடன், சுமார் ரூபா 360,000 / = க்கும் பெருமதியான தொகை மஞ்சளினையும் கைப்பற்றினர்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி கடந்த சில நாட்களில் மன்னார் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து போதைப்பொருள், மஞ்சள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. affiliate tracking url | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite