14th December 2023 19:01:13 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 11) பொரளை இராணுவ மகளிர் படையணியில் வெளிசெல்லும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.
அவர் இராணுவ மகளிர் வீராங்கனைகளுடன் உரையாற்றுவதற்கு முன்னர் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 23 வது படைத் தளபதியாக தனது சேவையை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள், மற்றும் வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.