14th December 2023 19:24:45 Hours
மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் புதிய படைத் தளபதியாக 12 டிசம்பர் 2023 அன்று பொரளை இராணுவ மகளிர் படையணியின் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அன்றைய நிகழ்வுகள் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இடம்பெற்றது. மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.