Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2024 21:44:40 Hours

இராணுவ தளபதியினால் பிள்ளைகளுக்கு பாடசாலை உதவிபொருட்கள் வழங்கல்

இராணுவத் தளபதி 2024 பெப்ரவரி 01 அன்று இராணுவத் தலைமையகத்தில் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கான வருடாந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்வு குறிப்பாக சிவில் ஊழியர்களின் பிள்ளைகளை இலக்காகக் கொண்டதுடன் தகுதியான குடும்பங்கள் மீதான நிதிச் சுமைகளைத் தணிப்பது மற்றும் கல்வி வெற்றிக்கு தேவையான உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

மொத்தம் தெரிவு செய்யப்பட்ட 37 பிள்ளைகளுக்கு அத்தியவசிய பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன. ஊழியர்களின் மூன்று பிரதிநிதிகளுக்கு பாடசாலை உபகரண பொதிகள் வழங்கப்பட்டதுடன் பல குடும்பங்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தின் பரந்த தாக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. இராணுவத்தினுள் வலுவான சமூக உணர்வை வளர்ப்பது, சிவில் ஊழியர்களின் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பாரம்பரிய இராணுவ கடமைகளுக்கு அப்பால் தனது கவனிப்பை விரிவுபடுத்துவது என்ற தளபதியின் பார்வையை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.

எதிர்கால சந்ததியினரை அரவணைத்துச் செல்வதில் தளபதியின் அர்ப்பணிப்பு, கூட்டுப் பொறுப்பாகக் கல்வியில் முனைப்பான அணுகுமுறை வெளிப்படுகிறது. தகுதியான மாணவர்களுக்கு நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குவதில் இந்த தலைமை தீவிரமாக பங்களிக்கிறது. ஒரு தந்தையாக பல்வேறு கல்வி முயற்சிகளில் இராணுவத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான புரிதலை நிரூபிக்கிறது.