07th November 2022 05:00:48 Hours
52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்கள் வியாழக்கிழமை (03) கோவிலகண்டி 11 வது இலங்கை பொறியியலாளர் படையணித் தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
52 வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன் கேணல் கேகேபி புஸ்ஸேவல மற்றும் 11 வது இலங்கை பொறியியலாளர் படையணி சிப்பாய்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது, 11 வது இலங்கை பொறியியலாளர் படையணியின் முகாமிற்கு தனது முதல் வருகையை குறிக்கும் வகையில் மாங்கன்று ஒன்றை நாட்டியதுடன் அனைத்து படையினர்களுக்கும் உரையாற்றினார், மேலும் தனது உரையில் 52 வது படைப்பிரிவின் பொறுப்பு பகுதிகளில் சுமூகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தனது கருத்துக்களை விளக்கினார். பின்னர் தளபதி 11 வது இலங்கை பொறியியலாளர் படையணியின் வளாகத்தை பார்வையிட்டதுடன், பூம்புகார் சண்முகா ஆரம்ப பாடசாலை வளாகத்தையும் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது 521 வது பிரிகேட் தளபதி கேணல் இந்திக்க பெரேரா மற்றும் 52 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள் உடனிருந்தனர்.