06th October 2022 11:00:53 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 வது படைப் பிரிவின் கீழுள்ள 661 வது பிரிகேடின் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியின் படையினரால் செல்லிபுரம் முல்லைத்தீவு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை (4) இடம் பெற்றது.
இவ் வீட்டு நிர்மாணிப்பு பணிகளானது இராணுவத்தின் திறமைகள் மற்றும் தொழில்நுட்ப அறிவாற்றலுடன் பிரதேசத்தில் உள்ள ஒரு அனுசரனையாளரால் வழங்கப்பட்டது.
66 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எஸ்.ஜே. பிரியதர்ஷன அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், 611, 662 மற்றும் 663 வது பிரிகேட் தளபதிகளும் இணைந்து அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.