02nd October 2022 11:56:09 Hours
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனித் சுசில் ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வியாழக்கிழமை (29) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன். இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர ஆர்வமுள்ள பொதுவான விடயங்கள் தொடர்பான கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர், மேலும் இருதரப்பு பயிற்சி தொகுதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இரு நாடுகளிலும் உள்ள ஆயுதப்படை உறுப்பினர்களின் நலனுக்காக அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
சுமுகமான சந்திப்பின் முடிவில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது,