30th September 2022 12:01:35 Hours
கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் சானக மேத்தானந்த அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மின்னேரியா கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசம் அதன் 28 வது ஆண்டு நிறைவு விழாவை பல நினைவு நிகழ்ச்சிகளுடன் புதன்கிழமை (14) கொண்டாடியது.
கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புக்களின் கொடிகளுக்கு சோமாவதிய ராஜ மகா விகாரையில் புத்தருக்கு கிலான்பச பூஜையினை தொடர்ந்து ஆசீர்வதிக்கப்பட்டன. மேலும் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு மின்னேரிய கோவிலில் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.
அதேபோன்று, கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படையினர் மின்னேரியா குளக்கரையினை தூய்மைப் படுத்தும் பணியை மேற்கொண்டதுடன், அப்பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் விட்டுச் சென்ற குப்பைகளை அகற்றினர்.