Header

Sri Lanka Army

Defender of the Nation

27th September 2022 17:10:02 Hours

'அபிமன்சல 1' இல் உள்ள போர் வீரர்களை சந்தித்த இராணுவத் தளபதி

எதிர் வரும் இராணுவ ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் இடம்பெற்ற முக்கிய சமய நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், போர்க்களத்தின் போதான படை வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூறும் வகையில் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அனுராதபுரத்திலுள்ள 'அபிமன்சல - 1' விடுதிக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். அங்கு சுமார் 40 போர்வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளை விடுதியில் உள்ள போர் வீரர் வரவேற்றதுடன் வாட்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருடனும் தளபதி கலந்துரையாடியதுடன் அவர்களின் நலன் மற்றும் தேவைகள் தொடர்பாக விசாரித்தார். இதனைத் தொடர்ந்து லெப்டினன் ஜெனரல் லியனகே அவர்கள் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதியை வழங்கினார்.

பின்னர், மாற்றுத்திறனாளி போர்வீரர்களின் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமையை வெளிபடுத்தும் அடையாளமாக அன்றைய பிரதம விருந்தினர் அனைத்து போர் வீரர்களுடன் இணைந்து மதிய விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இராணுவ தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, பிரதான பதவி நிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், அபிமன்சல -1 புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் ஏகநாயக்க, மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இறுதியாக தனது விஜயத்தின் அடையாளமாக இராணுவத் தளபதி அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.