22nd September 2022 16:16:41 Hours
இராணுவ நீர் விளையாட்டுக் குழு ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற படையணிகளுக்கிடையிலான வோட்டர் போலோ சம்பியன்ஷிப் - 2022” போட்டியில் இலங்கை இராணுவத்தின் 11 படையணிகள் கலந்து கொண்டன.
திறந்த மற்றும் புதியவர்கள் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் புதன்கிழமை (21) நடைபெற்றன.இலங்கை நீர் விளையாட்டு சங்கத்தின் அதிகாரிகளின் நடுவர்களின் முன்னிலையில் பனாகொட இராணுவ உடற் பயிற்சி பாடசாலை நீச்சல் தடாக வளாகத்தில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே மற்றும் இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் அபிவிருத்தி உப தலைவர் பிரிகேடியர் மானட யஹம்பத் ஆகியோர் இறுதிப் போட்டிகளை பார்வையிட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினர். இப்போட்டியாளர்களை கௌரவிப்பதற்கான தனி விழா ஒக்டோபர் 25ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியவர்கள் பிரிவில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணி அணி சம்பியன்ஷிப்பை வென்றது, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
திறந்த வகை சாம்பியன்ஷிப்பை இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர் படையணி அணி வென்றதுடன், இலங்கை பொறியாளர் படையணி இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது.