22nd September 2022 21:57:46 Hours
32 வருடங்களுக்கும் மேல் நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் பி.எ கருணாதிலக RWP (ஓய்வு) அவர்களது இராணுவ சம்பிரதாய இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை (22) பிற்பகல் கடவத்தை எல்தெனிய மயானபூமியில், அவரது இராணுவத் தோழர்கள் மற்றும் ஏனையவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இறுதி கிரிகை நிகழ்வில் இராணுவ தளபதியினை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ பதவி நிலைப் பிரதானி அவர்கள் கலந்து கொண்டார். மேலும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், முதன்மைப் பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் சிப்பாய்கள் மாலை நேரத்தில் மறைந்த அதிகாரிக்கு மரியாதை செலுத்தினர்.
இராணுவ மரபுகளின்படி, சிப்பாய்கள் அவரின் பூதவுடலைப் பெற்று அதனை ஏந்திச் சென்றதுடன் பின்னர் பூதவுடல் துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு தேசியக் கொடியிலால் போர்த்தப்பட்டது. இறுதி ஊர்வலம் மயான பூமியின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை முறையாகப் பெற்றுக் கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து மயான பூமியை நோக்கிச் சென்றனர்.
இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் பகுதி I ஆணை, அன்றைய நிகழ்வில், துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க சிப்பாய்கள், இறந்தவருக்கு அடையாள துப்பாக்கி மரியாதை செலுத்தினர், இது ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலியாகும்.இறுதி நிகழ்வாக சில நிமிடங்களுக்குப் பிறகு, சிப்பாய் ஒருவர் இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டதைக் குறிக்கும் ஒலி அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர், பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர் இராணுவத்தின் பாரம்பரியமான அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் மேஜர் ஜெனரல் பிஏ கருணாதிலக RWP (ஓய்வு) அவர்களுக்கு அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு வழங்கினார். மறைந்த மேஜர் ஜெனரல் பீஎ கருணாதிலக RWP (ஓய்வு) அவர்களின் இராணுவ இறுதிச் சடங்கு இராணுவ நிறைவேற்று பணிப்பகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட பகுதி 1 ஆணை இங்கே பின்வருமாறு;