22nd September 2022 16:36:20 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் கீழுள்ள 241 மற்றும் 242 வது பிரிகேட்களின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (18) திருக்கோவில், பொத்துவில் மற்றும் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 281 கிராம மக்களுக்கு கண் மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது.
எதிர்காலத்தில் அவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்படுவதற்கு முன்னர், பார்வைக் குறைபாடு மற்றும் கண் நோய்களைக் கொண்ட குறைந்த வருமானம் கொண்ட குடிமக்களுக்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் பணிப்புரைக்கு அமைய, வறிய சமூகத்திற்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்குடன் இந்த சமூகம் சார்ந்த நிகழ்ச்சி திட்டம் நடாத்தப்பட்டது.
24 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம, 241 மற்றும் 242 வது பிரிகேட்களின் தளபதிகளான பிரிகேடியர் சந்திரா அபேகோன் மற்றும் கேணல் அனுருத்த சொல்லங்காராச்சி, 8 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஜே அமடோர் மற்றும் 16 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி கே.ஆர்.எம் அலவத்த, ஆகியோர் இந்த மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர்.