14th September 2022 12:01:14 Hours
மன்னாரில் உள்ள 54 ஆவது படைப்பிரிவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் 11 இலங்கை பீரங்கிப் படையினரும் இன்று (14) காலை மன்னார் வீதித் தடையில் 250 கிராம் 2.5 (சுமா மில்லியன் ரூபா பெறுமதியான) ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.
வீதித் தடைச் சோதனையின் போது தலைமன்னரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்து காலை 8.30 மணியளவில் உரிமை கோரப்படாத ஐஸ் போதை பொருள் பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக படையினர் அந்த போதைப்பொருள் பொதிகளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மன்னார் பொலீஸார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.