10th September 2022 20:30:27 Hours
நாவுல விஷேட படையணி தலைமையகம் புதிதாக பதவி உயர்வு பெற்ற நான்கு சிரேஷ்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் விபுல இஹலகே, மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க எரியகம மற்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க ஆகியோரை பாராட்டும் விழா விஷேட படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (03) அன்று இடம்பெற்றது.
மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு முறையே வண்ணமயமான மற்றும் கண்ணியமான இராணுவ அணிவகுப்புகளுக்கு முன்னர் வருகை தந்த நான்கு அதிகாரிகளுக்கும் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அன்றைய நிகழ்வு தொடங்கியது.
அதன் பின்னர், மேஜர் ஜெனரல் விபுல இஹலகே, மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க எரியகம மற்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க ஆகியோர் முறையே விஷேட படையணி படையினருக்கு உரையாற்றியதுடன் அவர்களின் தொலைநோக்கு பார்வையினையும் எடுத்துரைத்தனர்.
அன்றைய தின நிகழ்வுகளுக்கு நினைவுகளைச் சேர்க்கும் முகமாக நான்கு மேஜர் ஜெனரல்களும் முகாம் வளாகத்திற்குள் மரக்கன்றுகளை நட்டதுடன் அன்றைய தின நிகழ்வுகள் முதலாவது விஷேட படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள அதிகாரிகளின் உணவறையில் வழங்கப்பட்ட மதிய உணவுடன் நிறைவுற்றது.
மேலும், நான்கு சிரேஷ்ட அதிகாரிகளும் அன்றைய தினம் விஷேட படையணி படைத் தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களிடமிருந்து அன்பான வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிறப்புப் படையணி படையினர் கலந்துகொண்டனர்.