Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2022 20:56:27 Hours

யாழ்ப்பாணத்தில் தேவையுடைய மற்றுமொரு குடும்பத்திற்கு புதிய வீடிற்கான அடிக்கல் நாட்டல்

யாழ். முகாவிலில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு ஒரு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (8) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைத் பிரிவு தலைமையகத்தின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டது.

55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன மற்றும் 552 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் பேரில் முதலாவது இயந்திரவியற் காலாட்படை படையணி படையினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

ரீச்சர் பார்ம் பிரைவேட் லிமிடெட் வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதி அனுசரணையை வழங்குவதுடன் கட்டுமானப் பணிகளை முதலாவது இயந்திரவியற் காலாட்படை படையணி படையினர் மேற்கொள்ள உள்ளனர்.

55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, 552 வது பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் மற்றும் பயனாளிகள் ஆகியோர் ஆரம்ப நிகழ்வின் போது கலந்துகொண்டனர்.