08th September 2022 12:25:23 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் அமைந்துள்ள 14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேடின் கீழ் உள்ள 8 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினர் செப்டெம்பர் 5-6 ஆம் திகதிகளில் மல்வானை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள நீரினால் வெளியே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு செல்வதற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
மல்வானை - கடுவெல பிரதேசத்தின் குறுக்கே பிரியும் களனி ஆற்றின் கரையோரப் பகுதிகள் பெய்து வரும் அடை மழை காரணமாக நீர் நிரம்பி வழிந்து அப்பகுதியை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
141வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 8 வது இலேசாயுத காலாட்படையணி கட்டளை அதிகாரி இராணுவ படகுகள், பேருந்துகள் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி அந்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.