07th September 2022 15:15:56 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 242 வது பிரிகேடின் 8 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினர் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை ஊழியர்களுடன் இணைந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை (30) திருக்கோவில் உம்ரியில் உள்ள ‘சிறுவர்களுக்கான கல்வி உதவி மன்ற மையத்தில்' நடமாடும் மருத்துவ முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்தனர்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் 16 வைத்திய அதிகாரிகள் மற்றும் 8 தாதியர் மற்றும் சிற்றூழியர்களும் படையினரின் ஒத்துழைப்புடன் பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ள சங்கமங்கிராமம் கிராம சேவை அலுவலர் பிரிவில் வசிக்கும் 331 குறைந்த வருமானம் பெறும் நபர்களை நடமாடும் மருத்துவ பரிசோதனையின் போது பரிசோதித்தனர்.
மேலும், நோய்வாய்ப்பட்ட பொதுமக்களின் பெரும்பாலோருக்கு மருந்து வழங்கப்பட்டதுடன் அவர்களில் சிலர் ஆதார வைத்தியசாலைகளுக்கும் பிராந்திய வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த மனிதாபிமான ஏற்பாடுகள் இடம்பெற்றன. இந்த ஏற்பாட்டில் 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சம்பத் பெர்னாண்டோ, 8 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஜே அமடோரு, 8 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.