06th September 2022 19:55:15 Hours
தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்ற திறந்த சக்கர நாற்காலி டென்னிஸ் இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டியில் (ITF 2) போட்டியிட்ட 4 வது இலங்கை பீரங்கி படையணியின் பதவி நிலை சார்ஜன்ட் டி.எஸ்.ஆர் தர்மசேன திறந்த இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தை தனதாக்கிக்கொண்டார்.
தாய்லாந்து திறந்த சக்கர நாற்காலி இரட்டை சாம்பியன்ஷிப் (ITF 2) போட்டி 2022 ஓகஸ்ட் 22 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரை தாய்லாந்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பதவி நிலை சார்ஜன்ட் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பல சக்கர நாற்காலி வீரர்கள் போட்டியில் பங்குபற்றினர்.