Header

Sri Lanka Army

Defender of the Nation

05th September 2022 18:26:50 Hours

241 பிரிகேட்டினால் வரிய குடும்பங்களுக்கு நீர் தாங்கி தொட்டிகள் விநியோகம்

வெளிநாட்டை வசிப்பிடமாக கொண்ட அனுசரணையாளரால் அம்பாறையில் அமைந்துள்ள 241 வது பிரிகேட் தலைமையகத்திற்கு வழங்கிய நிதியிதவி மூலம், 241 வது பிரிகேட்டின் 16 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினரால் கடந்த வியாழக்கிழமை 25 மஹா ஓயா பியசரகம கிராமத்தில் வசிக்கும் வசதியற்ற குடும்பங்களுக்கு 4 நீர் தாங்கி தொட்டிகள் வழங்கப்பட்டன.

இப் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு சீரான குடிநீர் வசதி இல்லாமையினால் அவ்வப்போது மிக சிரமத்துடன் தண்ணீர் சேகரித்து வந்ததுள்ளனர், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த அத்தியாவசிய குடி நீர் பற்றாக்குறை தொடர்பாக அறிந்துகொண்ட 241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபகோன் அவர்கள் 24 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களை தொடர்பு கொண்டு, நீர் தாங்கி தொட்டிகளை கொள்வனவு செய்வதற்கான அனுசரணையினை பெற்றுக் கொண்டார். குறித்த நீர் தாங்கி தொட்டி ஒவ்வொன்றும் சுமார் ரூ. 11,000/= ரூபாய் பெறுமதியானது என்பது குறிப்பிடதக்கது.