01st September 2022 16:19:54 Hours
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் “ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம்” எனும் திட்டமானது, சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. புதன்கிழமை (31) ஜூம் தொழிநுட்பத்தின் ஊடாக மேலும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக இராணுவ வீரர்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான விரிவான விரிவுரைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. நாடளாவிய ரீதியில் அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகம், படைப்பிரிவு தலைமையகம் மற்றும் பிரிகேட் தலைமையகம் ஆகியவற்றில் பணியாற்றும் படையினர் அமர்வுகளை செவிமடுப்பதற்காக இணைந்து கொண்டனர்.
மருத்துவ ஆலோசகர் லெப்டினன் கேணல் (டாக்டர்) எம்.எம்.எஸ் குரே அவர்கள் ‘நீரிழிவு நோய் மற்றும் அதிலிருந்து தடுப்பது’ என்ற தலைப்பில் ஒரு முக்கிய விரிவுரை ஆற்றினார். மேலும் பல ஆலோசகர்கள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி படையினருக்கு விளக்கமளித்தனர்.