02nd September 2022 18:21:55 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 27 வது தளபதியாக மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் செவ்வாய்க்கிழமை (30) வவுனியா, கொகெலியாவில் உள்ள 56 வது படைப்பிரிவு தலைமையகத்தில் பதவியேற்றார்.
மடுகந்த ராஜ மஹா விகாரையின் மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கியனை தொடர்ந்து அன்றைய தின நிகழ்வுகள் ஆரம்பமானது. மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, 561,562, 563 வது பிரிகேட் தளபதிகள் மற்றும் 56 வது படைத் தலைமையகத்தின் அனைத்துப் பணிநிலை அதிகாரிகள் முன்னிலையில் முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய பதவியினை ஏற்றுக்கொண்டார்.
புதிய படைப்பிரிவு தளபதிக்கு படையினரால் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதினை தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரியினால் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரக்கன்று நடல் மற்றும் குழு புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வும் இடம் பெற்றன. தொடர்ந்து அவர் படையினர் மத்தியில் உரையாற்றிய போது 56 வது படைப்பிரிவு தலைமையகத்தின் தனது முன்னோக்கு பார்வையினை பற்றி தெளிவுப்படுத்தினார்
விரைவில் ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் சமன் லியனகேக்குப் பதிலாக அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் தனது புதிய நியமனத்திற்கு முன்னர் பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பணியாளர் கடமைகள் பணிப்பகத்தில் பணிப்பாளராக கடமையாற்றினார்.