01st September 2022 16:26:06 Hours
புதிதாக பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து புதிய அதிகார சின்னங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர், வெள்ளிக்கிழமை (26) இராணுவ மரபுகளுக்கமைவாக புட்னானி 23 வது படைப்பிரிவு தலைமையகத்தின் படையினர் அவரை கௌரவித்து வரவேற்றனர்.
வருகை தந்த தளபதிக்கு 6 வது கஜபா படையணியின் சிப்பாய்கள் இராணுவ சம்பிரதாயமாக நுழைவாயிலில் ஒரு காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கினர்.
மேஜர் ஜெனரல் ஷேவந்த் குலதுங்க தனது 23 வது படைப் பிரிவினர் மத்தியில் உரையாற்றியதுடன், அன்றைய நிகழ்வுகளின் போது அனைத்து படையினருடன் தேநீரி விருந்துபசரிப்பிலும் கலந்து கொண்டார்.
பிரிகேட் தளபதிகள், 23 வது படைப்பிரிவின் பதவிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.