02nd September 2022 08:46:47 Hours
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தனது 13 வது ஆண்டு நிறைவை ஓகஸ்ட் 13 அன்று முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்களின் பங்கேற்புடன் கொண்டாடியது.
இந்த சிறப்பு நாளில், இராணுவத் வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன் முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதிக்கு விஜயம் செய்துடன் அங்கு அவருக்குப் பாதுகாப்புப் படையினரால் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தி வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரு தளபதிகளும் மரம் நடுகையில் இணைந்துடன் குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் மேலும் முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதி படையினர் மத்தியில் உரையாற்றினார்.
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் பதவிநிலை அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.