01st September 2022 16:23:12 Hours
கிராம மக்கள் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 ஆது படைப்பிரிவின் கீழுள்ள 122 வது பிரிகேட் படையினர் செல்ல கதிர்காமம் கரவில ஏரியின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்து கிராம மக்களின் உபயோகத்திற்காக திங்கட்கிழமை (29) கையளித்தனர்.
122 வது பிரிகேடின் 3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் கிராமவாசிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளை 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஆகியோர் நெருக்கமாக மேற்பார்வையிட்டனர்.
122 வது பிரிகேட் தளபதி, 3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் கிராம வாசிகள் புதுப்பிக்கப்பட்ட அணைப் பகுதியை திறக்கும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.