31st August 2022 20:10:14 Hours
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க, கனேமுல்லையில் உள்ள 4 வது கொமாண்டோ படையணியின் தலைமையகத்தின் 200 இற்கும் மேற்பட்ட படையினர், வெள்ளிக்கிழமை (26) படையனியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இரத்த தானம் செய்தனர்.
கொமாண்டோ பிரிகேட் படையணியின் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தாமாகவே முன்வந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு இரத்தத்தை வழங்க முன்வந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது பிரிகேட் தளபதி இரத்தானம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு இரத்தம் வழங்குபவர்களை ஊக்குவித்தார்.
கொமாண்டோ படையினரின் பெருந்தன்மைக்கு இரத்த வங்கி மருத்துவக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.