31st August 2022 20:06:32 Hours
ராகம இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க ஹொரணை 582 வது பிரிகேட் அதிகாரிகள் உட்பட 104 சிப்பாய்கள் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் நோயாளிகளின் நலனுக்காக இரத்த தானம் செய்தனர்.
582 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக அவர்களின் மேற்பார்வையில் சிவில் அலுவலக அதிகாரியின் ஒருங்கிணைப்புடன் சமூக நலன் சார்ந்த செயற்திட்டம் ஹொரணையில் உள்ள திக்கேன்புரவில் உள்ள இந்துமதி சமூக மண்டபத்தில் ஆரம்பமானது.
இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க, 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுலஇஹலகே அவர்களின் ஆசியுடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த திட்டத்திற்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட விரைவான ஒத்துழைப்பிற்கு இரத்த வங்கி அதிகாரிகள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தனர்.