30th August 2022 18:40:23 Hours
கஜபா படையணியின் போர்வீரர் சங்கத்தின் தலைவர் லெப்டினன் கேணல் தீபால் சுபசிங்க (ஓய்வு) அவர்களின் அழைப்பின் பேரில், கஜபா படையணியின் படையினர்களுக்காக சாலியபுர கஜபா படையணியின் தலைமையகத்தில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட விடுமுறை விடுதியானது இராணுவத் தளபதியும் கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் ஞாயிற்றுக்கிழமை (28) திறந்து வைக்கப்பட்டது.
கஜபா படையணி தலைமையக வளாகத்தில் ஓய்வுபெற்ற போர் வீரர்ககளுக்கு ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக, ஒரு முறையான விடுமுறை விடுதி நீண்டகாலமாக தேவையாக இருந்துள்ளன.
கஜபா போர்வீரர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்துடன் இணைந்து இந்த திறப்பு விழா இடம்பெற்றது. புதிய விடுமுறை விடுதி திறப்பு விழாவைத் தொடர்ந்து, கஜபா போர்வீரர் சங்கத்தின் 19வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இராணுவத் தளபதி, அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற அனைத்து வீரர்களுக்கும் உரையாற்றினார்.
இந்த நலன்புரி திட்டம் அனைத்து நவீன தளபாடங்கள் மற்றும் வசதிகளுடன் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஓய்வுபெற்ற போர்வீரர்களின் சந்திக்கும் இடமாக இது உதவுகிறது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ, கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் விஷ்வாஜித் வித்யானந்த மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
வருகை தந்த பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் கஜபா படைவீரர் சங்கத்தின் தலைவர் லெப்டினன் கேணல் தீபால் சுபசிங்க (ஓய்வு) மற்றும் ஏனைய படைவீரர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.பின்னர், இராணுவத் தளபதி ஒரு திறப்பு பலகையைத் திறந்து வைத்து, ஓய்வு பெற்ற போர்வீரர்களின் குடும்பத்திற்கு விடுமுறை விடுதியை திறந்து வைத்தார்.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் (ஓய்வு) மற்றும் மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன (ஓய்வு) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.