Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2022 15:45:22 Hours

இரணுவத் தளபதியினால் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் & குத்துச்சண்டை சாதனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கள்

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே அவர்கள் அங்கிருந்து திரும்பும் வழியில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு முதல் முறையான கள விஜயத்தை சனிக்கிழமை (27) மேற்கொண்டார். இந்த விஜயமானது அப்படைத் தலைமையகத்தின் பணிகள் தொடர்பான தகவல்களைப் பெறும்முகமாக அமைந்திருந்தது.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக வருகை தந்த இராணுவத் தளபதிக்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் வைத்து படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அனைத்து படைப்பிரிவு தளபதிகளுடன் இணைந்து தளபதியை வரவேற்றதுடன் இந்த விஜயத்தின் நினைவு சின்னமாக இராணுவத் தளபதி குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

சம்பிரதாய விஜயத்தின் போது இராணுவத் தளபதி அவர்கள், அனைத்து படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையளகுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மத்தியில் ஆற்றிய தனது உரையில், தங்களது கடமைகளின் முக்கியத்துவம் மற்றும் இராணுவத்தினால் தற்பொழுது முன்னெடுக்கப்படும் விவசாய திட்டம் தொடர்பான தொழில்முறை அறிவை தொடர்ந்து மேம்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக் காட்டிதுடன் நிறுவன ஒழுக்கத்தின் உயர்ந்த தரத்தை பேணுவதன் அவசியம் தொடர்பாகவும் நினைவுகூர்ந்தார். அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பின்னர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அழைப்பின் பிரகாரம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்திருந்த நன்கொடை நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி கலந்து கொண்டதுடன் அங்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது.மேலும் தமிழ் இராணுவ வீரர்களின் வறிய பிள்ளைகளுக்கு அத்தியாவசியப் பாடசாலைப் பொருட்களின் பொதிகளை தளபதி வழங்கி வைத்தார்.

மேலும், 2022ஆம் ஆண்டுக்கான இந்திய குத்துச் சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜெகனேஸ்வரம் விஜிதா மற்றும் 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற புதுக்குடியிருப்பு வித்தியாலயத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை கணேஷ் இந்திகாதேவி ஆகியோருக்கு ரூ.50,000 காசோலை வழங்கப்பட்டது. மேலும் எதிர்கால சாதனைகளுக்காக அவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இருவரையும் தளபதி வாழ்த்தியதுடன், அவர்களுடன் ஓரிரு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

அன்றைய பயணத்தின் இறுதியாக, தனது வருகையின் நினைவாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் மா மரக்கன்று ஒன்றை நட்டிய தளபதி தலைமையகத்தின் அதிதி புத்தகத்தில் தனது கருத்துகளையும், எண்ணங்களையும் பதிவிட்டார்.

57, 59, 64, 66 மற்றும் 68 வது படைப்பிரிவுகளின் தளபதிகள். முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.