24th August 2022 20:00:13 Hours
மஹரகம அபேக்ஷ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு இளநீர் (தெம்பிலி) வழங்கும் மற்றொரு மனிதாபிமான நிகழ்வை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப் பிரிவின் 144 வது பிரிகேடின் கீழுள்ள 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினர் ஓகஸ்ட் 22 அன்று முன்னெடுத்தனர்.
14 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ரொஷான் ஜயமன்ன அவர்களின் தலைமையில் 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடிதுவாக்கு அவர்களின் வழிகாட்டலின் கீழ் 144 வது பிரிகேட் மற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையணி படையினர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தனர். அந்த நோயாளிகள் அனைவருக்கும் குளிர்ச்சியை கொடுக்க 2000 இளநீர்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 144 வது பிரிகேட் தளபதி, 144 வது பிரிகேட் மற்றும் 2 (V) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் இராணுவ வீரர்கள் மற்றும் அபேக்ஷ வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரிகளுடன் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.