Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2022 19:45:13 Hours

புதிய மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை சமிக்ஞைப் படையணியின் மேஜர் ஜெனரல் சுதத் ரத்நாயக்க அவர்கள் ஓகஸ்ட் 23 அன்று தியத்தலாவை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முன்னரங்கு பாதுகாப்பு பகுதி புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியை பதவி நிலை அதிகாரிகள் வரவேற்றனர்.

மத அனுஷ்டானங்கள் மற்றும் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில், மேஜர் ஜெனரல் சுதத் ரத்நாயக்க அவர்கள் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதன்பின், அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மா மரக்கன்று நடுவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து அனைத்து பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் சுதத் ரத்நாயக்க அவர்கள் தற்போதைய நியமனத்திற்கு முன்னர் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதியாக பதவி வகித்தார். அண்மையில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தீபால் ஹத்துருசிங்க அவர்களுக்கு பதிலாக இவர் இந்த நியமனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.