24th August 2022 19:30:13 Hours
பிரதி பதவி நிலைப் பிரதானியும் இயந்திரவியல் காலாட்படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், உள்ளுர் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி, இயந்திரவியல் காலாட்படையணியின் சேவா வனிதா பிரிவின் உதவியுடன் இயந்திரவியல் காலாட் படையணியின் வீரர்களுக்கு ஐந்து புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை அப்படையணியினர் ஆரம்பித்துள்ளனர்.
அதன்பிரகாரம், 4 வது இயந்திரவியல் காலாட் படையணியின் ஒரு காலாட்படை வீரருக்கு நிக்கவெரட்டிய, ரஸ்நாயக்கபுரவில் நிர்மானிக்கப்பட்ட முதல் வீடு குடும்பத்திடம் சம்பிரதாயபூர்வமாக 21 ஓகஸ்ட் 2022 அன்று ஒப்படைக்கப்பட்டது. இயந்திரவியல் காலாட் படையணியின் சேவா வனிதா பிரிவு மற்றும் 4 வது இயந்திரவியல் காலாட் படையணி என்பன இணைந்து இதற்கான நிதியுதவியை வழங்கின.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கலந்து கொண்டார். நிலையத் தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க, 4 வது இயந்திரவியல் காலாட்படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்.ஏ.எஸ்.ஆர். ரணசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள் பதவிநிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.