24th August 2022 19:00:13 Hours
அம்பாறையில் அமைந்துள்ள போர்ப் பயிற்சிப் பாடசாலையின் 44 வது தளபதியாக பிரிகேடியர் ஆர்.பி. ருவான் முனிபுர அவர்கள் திங்கட்கிழமை (22) அம்பாறையிலுள்ள போர்ப் பயிற்சிப் பாடசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அந்த வளாகத்தில் நினைவு சின்னமாக சந்தன மரக்கன்றினை நட்டார். இந்நிகழ்வில் அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் ஏ.கே.சி.எஸ் டி சில்வா, போர் பயிற்சிப் பாடசாலையின் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துகொண்டனர்.