24th August 2022 07:17:26 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் “இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 -2025” மற்றும் வலிமை பகுப்பாய்வு பற்றிய தொண்டர்களின் அனுமானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 18 ஆகஸ்ட் 2022 கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்டது.
ஆய்வுத் துறையில் நிபுணரான தளபதி செயலகத்தின் கேணல் கே.டி.ஆர்.பி கொடிப்பிலி அவர்களால் “இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 -2025” பற்றிய விழிப்புணர்வு விரிவுரை நடத்தப்பட்டது.
சமாதானத்திற்கான போருக்குப் பின்னர் ஏற்பட்ட இராணுவத்தின் மாற்றங்களினை தொடர்ந்து ஓர் அமைப்பாக அனுபவிக்கக்கூடிய எதிர்கால சவால்களுக்கான நிர்வாகத் தயார்நிலையைச் சந்திப்பதில் இந்த முயற்சி முக்கியமாகப் பின்பற்றப்பட்டது.
மேலும், தொழில் திட்டமிடல் செயல்முறையானது விவாதிக்கப்பட்ட கருப்பொருள் கூறுகளில் ஒன்றாகும் மற்றும் அறிவார்ந்த மூலதனத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, இதனால் சமகால சூழலில் அமைப்பை போட்டித்தன்மையுடன் மதிப்பிடுவது எளிதாக இருக்கும்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் திட்டத்தின் போது அமர்வுகளுக்கு பங்களித்தனர்.